search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
    X
    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

    தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கம்- கலெக்டர் தகவல்

    தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெறுவதால் சென்னை மார்க்கம் தவிர புறநகர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அதிக இடநெருக்கடி ஏற்பட்டது. இதை தடுக்க புதிய மீன் மார்க்கெட், மக்கான் அருகே உள்ள லாரி ஷெட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது. எனவே ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேலும், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் புறநகர் பஸ்கள் மற்றும் அனைத்து டவுன் பஸ்கள் தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை, ஆற்காடு, காஞ்சிபுரம், தாம்பரம், கல்பாக்கம், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும். இந்த மாறுதல் நாளை (புதன்கிழமை) முதல் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×