என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்1 Nov 2020 9:03 AM GMT (Updated: 1 Nov 2020 9:03 AM GMT)
குத்தாலம் அருகே கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
குத்தாலம்:
குத்தாலம் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் குத்தாலம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், ஓட்டல்களில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பல கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் சற்று மனம் மாறி கடைகளுக்கு பைகளை கொண்டு செல்லக்கூடிய நிலையில் குத்தாலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதால் மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
எனவே பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X