என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Byமாலை மலர்21 Oct 2020 8:34 AM GMT (Updated: 21 Oct 2020 8:34 AM GMT)
ஈரோட்டில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு நொச்சிக்காட்டுவலசு வெள்ளப்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன்சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 2 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் கோவிலின் பூசாரி நேற்று அதிகாலை 4 மணிஅளவில் நடையை திறந்து கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உண்டியலில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி, ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு நொச்சிக்காட்டுவலசு வெள்ளப்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன்சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 2 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் கோவிலின் பூசாரி நேற்று அதிகாலை 4 மணிஅளவில் நடையை திறந்து கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உண்டியலில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி, ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X