என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் பண மோசடி- வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் பண மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    காட்பாடி:

    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கீழ்மொணவூரை சேர்ந்த உதயகுமார் (வயது 27) என்பவர் தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் ஆன்லைனில் பதிவிட்டிருந்தார்.

    இதனை நம்பிய சிலர் வேலை கேட்டு பணத்தை ஆன்லைனில் கட்டியுள்ளனர். அதன்படி, அவர் வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் பெண் ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×