search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கரூர் அருகே பெண் தற்கொலை

    கரூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சாந்தி (வயது 40). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைகண்டஅருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×