search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்
    X
    தேமுதிக தலைவர் விஜயகாந்த்

    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

    உடல்நிலை நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில்  இருந்து கடந்த 2ந்தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து விஜயகாந்த்  கடந்த 6ந்தேதி மீண்டும்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சைக்கு பின்னர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

    இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    Next Story
    ×