search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சிபுரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

    காஞ்சிபுரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு மங்காத்தா சூதாட்டத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் புது தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 41), காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த குட்டிவேதகிரி (44), பெருமாள் (46), வேலு (62), சுப்பிரமணி (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.120, சீட்டு கட்டுகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
    Next Story
    ×