என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் சென்று ஆடு திருடிய 2 பேர் கைது - மேலும் 5 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்24 Sep 2020 11:08 AM GMT (Updated: 24 Sep 2020 11:08 AM GMT)
சிவகங்கை அருகே காரில் சென்று ஆடு திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை சிவகங்கை-திருப்பத்தூர் சாலையோரமாக மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த சிலர், வினோத் குமாரின் ஆடுகளை பிடித்து காரில் ஏற்ற முயன்றனர். இதை பார்த்த வினோத்குமார் அவர்களை பிடிக்க ஓடி வந்தார். அதற்குள் அவர்கள் ஒரு ஆட்டை மட்டும் காரில் தூக்கி கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து வினோத்குமார் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனு பிரியா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிவகங்கை காளவாசல் பகுதியில் வசிக்கும் சரவணன்(24), ஆனந்த்(29) உள்பட 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதைதொடர்ந்து சரவணன், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் சிவகங்கை, காளையார்கோவில், ஒக்கூர் உள்பட பல்வேறு இடங்களில் 94 ஆடுகள் திருடியது தெரிந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ஆட்டோ டிரைவர்கள் ஆவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X