search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேப்பூர் அருகே சிறுமி கடத்தல்- வாலிபர் கைது

    வேப்பூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேப்பூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள இருசளாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவர் கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது.

    இதற்கு கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், நடேசன் (31) ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் வேப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் அருண் உள்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    Next Story
    ×