என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 மகன்கள் இறந்த துயரத்தால் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
Byமாலை மலர்22 Sep 2020 10:27 AM GMT (Updated: 22 Sep 2020 10:27 AM GMT)
2 மகன்கள் இறந்த துயரத்தால் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியண்ணன் (வயது 70). நெசவுத் தொழிலாளி. அவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்களுடைய மகன்கள் குமார் (43), கணேசன் (40). இதில் குமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணேசன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தார். 2 மகன்களும் இறந்துவிட்டதால் அதையே நினைத்து பழனியம்மாள் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பச்சியண்ணன் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் பழனியம்மாள் மட்டும் இருந்தார். அப்போது அவர் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பழனியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X