என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்- பெண் கைது
Byமாலை மலர்13 Sep 2020 11:46 AM GMT (Updated: 13 Sep 2020 11:46 AM GMT)
முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவையாறு:
திருவையாறை அடுத்த திருச்சோற்றுத்துறையை சேர்ந்தவர் பெரம்மையன் மகன் அய்யப்பன் (வயது23). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரம்மையன் அண்ணன் வெங்கடாசலம் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் வெங்கடாசலம், அவரது மனைவி வளர்மதி(45), மகன் செந்தில் ஆகிய 3 பேரும் அய்யப்பன் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து வளர்மதியை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய வெங்கடாசலம், செந்தில் ஆகிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X