என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பெண்ணேஸ்வரமடம் ஆற்று படுகை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ராசன் கொட்டாய் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 38), பெத்தனப்பள்ளி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ஊத்தங்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார், அப்பிநாயக்கம்பட்டி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (39), ரவிபிரசாத் (28), விஸ்வநாதன் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் இருந்து ரூ.16,640-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×