என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகொண்டா பேரூராட்சியில் சாலை பணியை கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்26 Aug 2020 1:06 PM GMT (Updated: 26 Aug 2020 1:06 PM GMT)
பள்ளிகொண்டா பேரூராட்சியில் சாலை பணியை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா பேரூராட்சிக்குட்பட்ட ராமாபுரம் சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்தது. இந்த சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரூ.75 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. இந்த நிலையில் தார்சாலை தரமற்றதாக போடபட்டதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர். அதன்பேரில் நேற்று மாலை ராமாபுரம் தார் சாலையை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாலையின அகலம் மற்றும் நீளம் குறித்தும், தரத்துடன் சாலைபோடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். சாலை தரமாக உள்ளதாகவும், சாலையின் இரு புறமும் போதிய இடவசதி இல்லாததால் மண் அணைக்க முடியாத காரணத்தினால் சாலை ஓரங்களில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது, அதை சீரமைக்க கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன், இளநிலை பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X