என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்24 July 2020 12:33 PM GMT (Updated: 24 July 2020 12:33 PM GMT)
காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ சிகிச்சை வழங்க காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் பெருநகராட்சிக்கு சொந்தமாக உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.
அவர்களை அங்கு தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமண மண்டபம் அருகில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் ரெயில்வே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பகுதி மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X