search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.பாரதி
    X
    ஆர்.எஸ்.பாரதி

    மு.க.ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது- ஆர்.எஸ்.பாரதி

    கந்த சஷ்டி விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப‌ப்படுகிறது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் போலி தகவலை பதிவிட்டுள்ளனர். தற்போது பிரச்சனைகளை திசைத்திருப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான செய்தி டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப‌ப்படுகிறது. மீண்டும் புகாரளித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம்.

    இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி அற்பத்தனமான செயலை செய்கின்றனர். கருணாநிதி ஆட்சியில் இந்துக்கோவில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. அனைத்து மதத் தலைவர்களும் திமுகவுடன் தொடர்பில் இருந்துள்ளனர். திமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளனர். திருவாரூர் தேரை ஓட வைத்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×