என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது
Byமாலை மலர்16 Jun 2020 2:18 PM GMT (Updated: 16 Jun 2020 2:18 PM GMT)
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ராதா மங்கலம் எறும்புகன்னியில் சாராயம் விற்ற முருகையன் (வயது45), தெற்காலத்தூரில் சாராயம் விற்ற சாரதா (66), கடம்பர வாழ்க்கை பகுதியில் சாராயம் விற்ற மாரியம்மாள் (55), சிக்கல் அய்யனார் தோப்பில் சாராயம் விற்ற கார்த்திகாயினி(40), ஆவராணி ரெயில்வே கேட் அருகே சாராயம் விற்ற நாகை வண்டிப்பேட்டையை சேர்ந்த லெட்சுமி (48) ஆகிய 5 பேரையும் போலீசார் பிடித்தனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X