என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு
Byமாலை மலர்9 Jun 2020 2:59 PM GMT (Updated: 9 Jun 2020 2:59 PM GMT)
ஈரோட்டில் வாசலில் விளையாடியபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
ஈரோடு:
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 34). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ராகவி. இவர்களுடைய மகன் ஜீவன்குமார் (6). மகள் ருத்திரபிரியா (3). பிரேம்குமார் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டுக்கு முன்பு செல்லும் சாக்கடையை சீரமைக்கும் பணி நேற்று பகலில் நடந்தது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டது.
இந்த பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் ஜீவன்குமாரும், ருத்திரபிரியாவும் இரவு 7 மணிஅளவில் வீட்டுக்கு முன்பு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோர் மீது விழுந்தது.
இதைப்பார்த்ததும் ராகவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ருத்திரபிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜீவன்குமாருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 34). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ராகவி. இவர்களுடைய மகன் ஜீவன்குமார் (6). மகள் ருத்திரபிரியா (3). பிரேம்குமார் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டுக்கு முன்பு செல்லும் சாக்கடையை சீரமைக்கும் பணி நேற்று பகலில் நடந்தது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டது.
இந்த பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் ஜீவன்குமாரும், ருத்திரபிரியாவும் இரவு 7 மணிஅளவில் வீட்டுக்கு முன்பு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோர் மீது விழுந்தது.
இதைப்பார்த்ததும் ராகவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ருத்திரபிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜீவன்குமாருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X