search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சுவர் இடிந்தது"

    • போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • நேற்று மாலை தொழிலாளர்கள் சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்பகுதியில் மேலும் பள்ளம் தோண்டினர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டையில் போலீசார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை சுற்றி சுமார் 7 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக போலீஸ் குடியிருப்பு சுற்றுச்சுவர் அருகே நீண்ட தூரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

    நேற்று மாலை தொழிலாளர்கள் சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்பகுதியில் மேலும் பள்ளம் தோண்டினர். அப்போது போலீஸ் குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டமானது. அந்த இடத்தில் இருந்து சில அடி தூரம் தாண்டி குடியிருப்பு உள்ளதால் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கால்வாய் அமைக்கும் பணியில் அதிக அளவிலான தொழிலாளர்கள் ஈடுபடாததாலும், சுற்றுச்சுவர் அருகே யாரும் இல்லாததாலும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ×