என் மலர்
செய்திகள்

மின்சாரம் தாக்கி பலி
கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கணபதிபாளையம் நால்ரோடு மின்சார அலுவலகத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் பொன்னன் (58). இவர் சாணார்பாளையம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் போடுவதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி டிரான்ஸ்பார்மர் மீது தொங்கிய நிலையில் இருந்தார்.
அங்கு இருந்தவர்கள் உடனடியாக மின்சார அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மின் ஊழியர்கள் பொன்னனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பொன்னனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் பொன்னன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story






