என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலத்தில் கார் மோதி பெண் பலி
Byமாலை மலர்4 Jun 2020 11:13 AM GMT (Updated: 4 Jun 2020 11:13 AM GMT)
சிவகங்கை அருகே பாலத்தில் கார் மோதி பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாடானை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா புளியால் அருகே உள்ள சக்கந்தி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மனைவி சீதாலெட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை சக்கந்தி கிராமத்தை சேர்ந்த கோபால் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருவாடானை அருகே உள்ள மேல்பனையூர் விலக்கு சாலை அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த சீதாலெட்சுமி உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.
சீதாலெட்சுமி, அவரது மகன் அஜீத்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சீதாலெட்சுமி பரிதாமாக உயிரிழந்தார். அஜீத்குமார் உள்பட 3 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா புளியால் அருகே உள்ள சக்கந்தி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மனைவி சீதாலெட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை சக்கந்தி கிராமத்தை சேர்ந்த கோபால் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருவாடானை அருகே உள்ள மேல்பனையூர் விலக்கு சாலை அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த சீதாலெட்சுமி உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.
சீதாலெட்சுமி, அவரது மகன் அஜீத்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சீதாலெட்சுமி பரிதாமாக உயிரிழந்தார். அஜீத்குமார் உள்பட 3 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X