என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவரது மனைவி தங்கமணி (35). இவர்களது மகன் பிரனித் (5). இவர்கள் 3 பேரும் ஈரோட்டிற்கு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஈரோடு அருகே ஆணைக் கல்பாளையம் ரிங் ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கந்தசாமி, அவரது மனைவி தங்கமணி, மகன் பிரனித் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அந்தப் பகுதியாக வந்த மக்கள் விபத்து நடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. விபத்து குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்