search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருதரப்பினர் மோதல்
    X
    இருதரப்பினர் மோதல்

    கடலூர் அருகே இருதரப்பினர் மோதல்- 2 பேர் கைது

    கடலூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள தொண்டமாநத்தத்தை சேர்ந்தவர் வாசுதேவன். வீட்டின் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக வாசுதேவனுக்கும், வேல்முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் விஜய்(வயது 20), பிரகாஷ்(28) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×