என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடியாத்தம் அருகே மாந்தோப்புக்குள் புகுந்து 7 காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களை ஒட்டியபடி உள்ள வனப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அடிக்கடி தமிழக எல்லைப் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியாத்தம் அடுத்த தன கொண்டபள்ளி பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் மாந்தோப்புக்குள் புகுந்து ஏராளமான மா மரங்களை சேதப்படுத்தியது. மேலும் மாங்காய்களை சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனத்துறையினர், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் மற்றும் மேளங்கள் அடித்து பல மணிநேரம் போராடி காட்டு யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
ஆனாலும் இரவு நேரங்களில் மீண்டும் தமிழக எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்துகிறது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்