search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    தனியார் மருத்துவமனைகள் தினமும் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் கண்காணிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் தனியார் மருத்துவமனைகள் தினமும் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடினார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா  தொற்று பரிசோதனை


    அரசு மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நவீனமய மாக்கப்பட்டுள்ளது. தேவையான படுக்கைவசதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசு முயற்சியால் முதல்நிலை பணியாளர்களாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படுவதால் உலகத்திலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் என்பது 0.7 என்ற அளவில் உள்ளது.

    நம்முடைய சிகிச்சை முறை குறித்தும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது குறித்தும் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசைப் பாராட்டி வருகிறது. தற் போது தமிழக அரசோடு இணைந்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சை அளித்து வருகிறது அவர்களுக்கு தொடர்ந்து தினந்தோறும் ஐ.சி.எம்.ஆர். புரோட்டோகால் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மருத்துவமனைகளிலும் வீடியோ கால் மூலமாக கொரோனா நோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அரசு சார்பாக முன்னெச்சரிக்கை கவசங்கள் அளிக்கப்பட்டு அவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டுதான் நோயாளிகளை சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இருப்பினும் எதிர்பாராத விதமாக அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் எந்த விதபயமும் இல்லாமல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது. அரசு அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×