என் மலர்
செய்திகள்

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
தனியாரிடம் மின்துறையை அளிக்க கூடாது- நாராயணசாமி
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தனியாரிடம் மின்துறையை அளிக்க கூடாது என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருமண விழாவில் 50 பேரும், ஈமச்சடங்கிற்கு 20 பேர் மட்டுமே அனுமதி, உண்டு.
புதுவை மக்கள் காரைக்கால் பகுதிக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழக அரசிடம் பேசி புதுவையில் இருந்து காரைக்கால் பகுதிக்கு பஸ்கள் வழியில் நிற்காமல் நேரடியாக செல்ல முடிவு எடுக்க உள்ளோம்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அனைவரும் முக கவசத்துடனும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். புதுவையில் கோவிட் வரி (கொரோனா) போட உள்ளோம்.
இது சம்பந்தமாக அமைச்சரவை கூடி முடிவு செய்ய உள்ளோம். அவசிய பணி இல்லாமல் யாரும் வெளியில் சுற்றக்கூடாது. நாளை முதல் பெரிய மார்க்கெட்டில் மீன் அங்காடி திறக்கப்படும்.
மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் கடன் பெறும் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி கொடுத்துள்ளது. புதுவைக்கு சாதகமாக அமையும்.
மத்திய அரசு தற்போது மின் துறையை தனியாருக்கு வழங்க இருப்பதாக கூறி உள்ளது. இது மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது. விவசாயிகளுக்கும், ஏழை- எளிய மக்களுக்கு மின்சாரம் இலவசமாக தருகிறோம்.
அதேபோல் தொழிற்சாலைகளுக்கு மின் சலுகைகள் தருகிறோம், மின்துறையை தனியாரிடம் ஒப்படைத்தால் எந்த திட்டத்தையும் செய்ய முடியாது.
இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கு இதுவரை பதில் வரவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருமண விழாவில் 50 பேரும், ஈமச்சடங்கிற்கு 20 பேர் மட்டுமே அனுமதி, உண்டு.
புதுவை மக்கள் காரைக்கால் பகுதிக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழக அரசிடம் பேசி புதுவையில் இருந்து காரைக்கால் பகுதிக்கு பஸ்கள் வழியில் நிற்காமல் நேரடியாக செல்ல முடிவு எடுக்க உள்ளோம்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அனைவரும் முக கவசத்துடனும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். புதுவையில் கோவிட் வரி (கொரோனா) போட உள்ளோம்.
இது சம்பந்தமாக அமைச்சரவை கூடி முடிவு செய்ய உள்ளோம். அவசிய பணி இல்லாமல் யாரும் வெளியில் சுற்றக்கூடாது. நாளை முதல் பெரிய மார்க்கெட்டில் மீன் அங்காடி திறக்கப்படும்.
மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் கடன் பெறும் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி கொடுத்துள்ளது. புதுவைக்கு சாதகமாக அமையும்.
மத்திய அரசு தற்போது மின் துறையை தனியாருக்கு வழங்க இருப்பதாக கூறி உள்ளது. இது மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது. விவசாயிகளுக்கும், ஏழை- எளிய மக்களுக்கு மின்சாரம் இலவசமாக தருகிறோம்.
அதேபோல் தொழிற்சாலைகளுக்கு மின் சலுகைகள் தருகிறோம், மின்துறையை தனியாரிடம் ஒப்படைத்தால் எந்த திட்டத்தையும் செய்ய முடியாது.
இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கு இதுவரை பதில் வரவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
Next Story






