search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    கூடலூர் அருகே மளிகை கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

    கூடலூர் அருகே மளிகை கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தாதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று, நேற்று அதிகாலை 4 மணியளவில் கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. தொடர்ந்து தொரப்பள்ளி பஜாருக்குள் புகுந்தது. அயூப் என்பவரது மளிகை கடையை உடைத்து மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் யானையை விரட்டினர். ஆனால் அது செல்லவில்லை. தகவல் தெரிந்ததும் கார்குடி வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×