என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காட்பாடி வாலிபர் கொலையில் கள்ளக்காதலி உள்பட மேலும் 2 பேர் கைது

    காட்பாடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 28). கடந்த 10-ந் தேதி விருதம்பட்டு சர்க்கார் தொப்பு பலாற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தின் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீஸ் விசாரணையில் சுனிலை அவரது கள்ளக்காதலி வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்து ஆற்றங்கரையோரம் வீசிச் சென்றது தெரியவந்தது.

    மேலும் சுனிலின் கள்ளக்காதலி கோகிலா மாயமானார்.

    டி.எஸ். பி துரைபாண்டியன் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இந்த கொலை சம்பந்தமாக ஆற்காட்டை சேர்ந்த மணிகண்டன் (28), காங்கேயநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். கணவரை பிரிந்து வாழ்ந்த கோகிலாவுக்கு சுனிலுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது கடந்த 5 ஆண்டுகளாக சுனில் கோகிலாவின் வீட்டிற்கு வந்து சென்றார்.

    சுனில் கோகிலாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் மனமுடைந்த கோகிலா இதுபற்றி அவருடைய கணவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கோகிலா தனது வீட்டுக்கு வந்த சுனிலை வெட்டிக் கொலை செய்தனர். கொலையை மறைப்பதற்காக சுனிலின் உடலை பாலாற்றங்கரையில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர்.

    கோகிலா தனது வீட்டில் தரையில் படிந்திருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். போலீசார் தலைமறைவான கோகிலாவை தேடி வந்தனர். மேலும் சுனில் உடலை ஆற்றங்கரைக்கு தூக்கிச் செல்வதற்கு கோகிலாவின் தந்தை முத்து உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து போலீசார் முத்துவை கைது செய்தனர், மேலும் தலைமறைவாக இருந்த கோகிலாவை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×