என் மலர்
செய்திகள்

சீல் வைப்பு
கோபியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத செல்போன் கடைக்கு சீல்
கோபியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நகர்ப்பகுதியில் இயங்கி வந்த செல்போன் கடைக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் முகாமை கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சுகாதார பணியாளர்களிடம் முகாமில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களிடம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
கோபி பகுதியில் அனுமதி வேண்டி விண்ணப்பித்து இருந்த இரு தனியார் மில்களை ஆய்வு மேற்கொண்டார். அங்கு கடைப்பிடிக்கப்படும் சமூக இடைவெளி, பணியாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நகர்ப்பகுதியில் இயங்கி வந்த செல்போன் கடைக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னர் பண்ணாரி சோதனை சாவடிக்கு சென்று வாகன தணிக்கை மேற்கொண்டார். அங்கு வாகனங்களில் வருபவர்கள் முறையான வாகன அனுமதி பெற்று உள்ளார்களா? எனவும் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். போலீசாரின் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் முகாமை கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சுகாதார பணியாளர்களிடம் முகாமில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தடையின்றி உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களிடம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
கோபி பகுதியில் அனுமதி வேண்டி விண்ணப்பித்து இருந்த இரு தனியார் மில்களை ஆய்வு மேற்கொண்டார். அங்கு கடைப்பிடிக்கப்படும் சமூக இடைவெளி, பணியாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நகர்ப்பகுதியில் இயங்கி வந்த செல்போன் கடைக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னர் பண்ணாரி சோதனை சாவடிக்கு சென்று வாகன தணிக்கை மேற்கொண்டார். அங்கு வாகனங்களில் வருபவர்கள் முறையான வாகன அனுமதி பெற்று உள்ளார்களா? எனவும் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். போலீசாரின் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story






