search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா வார்டு நர்சுகள் 2 இடங்களில் தங்க ஏற்பாடு

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணிபுரியும் நர்சுகள் தங்குவதற்காக காட்பாடி தனியார் கல்லூரி, வேலூர் தனியார் ஓட்டல்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கொரோனா வார்டில் உள்ள டாக்டர்களுக்கு வேலூர் தனியார் கல்லூரியில் அறை ஒதுக்கி உள்ளனர். நர்சுகளுக்கு தங்குமிடம் ஒதுக்குவதில் இழுபறி நீடித்துள்ளது. நேற்று இரவு பணி முடிந்த நர்சுகள் தங்குவதற்கு இடமில்லாமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நர்சுகள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திருவண்ணாமலை சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மருத்துவ கல்லூரி ஆர்.எம்.ஓ. இன்பராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நர்சுகளிடம் தங்குவதற்கு அறை, உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் ஆஸ்பத்திரியில் உள்ள நர்சிங் விடுதியில் இரவு தங்க வைக்கப்பட்டனர்.

    நர்சுகள் தங்குவதற்காக காட்பாடி தனியார் கல்லூரி மற்றும் வேலூர் தனியார் ஓட்டல்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 இடங்களில் இன்று முதல் நர்சுகள் பணி முடிந்து தங்கிக் கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×