என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம்
வேலூர்:
வேலூர் மாநகர பகுதியில் ஊரடங்கு மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆனாலும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை நேரங்களிலும் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பைக்கில் சுற்றி திரிகின்றனர். இவர்களை மடக்கி போலீசார் விசாரித்தால் மருந்து மற்றும் உணவு வாங்க செல்வதாக காரணம் கூறுகின்றனர்.
மேலும் சில வாலிபர்கள் அத்துமீறி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.இதை தடுக்க போலீசார் கட்டாய ஹெல்மட் அமல் படுத்தி உள்ளனர்.
இதனால் வேலூரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படுகிறது.
வேலூர் கிரீன் சர்கிள் அண்ணா சாலை காட்பாடி தொரப்பாடி சத்துவாச்சாரி பகுதிகளில் இன்று காலையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
2 நாட்களில் ஹெல்மெட் அணியாத 500 க்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்கபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்