search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து
    X
    தீவிபத்து

    சமையல் செய்தபோது தீப்பற்றியதில் கூரை வீடு சாம்பல்- மாற்றுத்திறனாளி குழந்தை மீட்பு

    பேராவூரணி அருகே சமையல் செய்தபோது தீப்பற்றியதில் கூரைவீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் மாற்றுத்திறனாளி குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சத்யா. இவரது மனைவி ராஜேஸ்வரி. கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பற்றி கூரைவீடு முழுவதும் எரிந்து விட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்களால் தீ அணைக்கப்பட்டது. அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் 3 பேரும் மீட்கப்பட்டனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் தகவல் தெரிவித்ததன்பேரில் தாசில்தார் ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை ரூ.5 ஆயிரம், வேட்டி மற்றும் சேலை வழங்கினார். உடன் ஆவனம் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் இருந்தார்.

    Next Story
    ×