என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமையல் செய்தபோது தீப்பற்றியதில் கூரை வீடு சாம்பல்- மாற்றுத்திறனாளி குழந்தை மீட்பு
Byமாலை மலர்22 April 2020 8:54 AM GMT (Updated: 22 April 2020 8:54 AM GMT)
பேராவூரணி அருகே சமையல் செய்தபோது தீப்பற்றியதில் கூரைவீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் மாற்றுத்திறனாளி குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சத்யா. இவரது மனைவி ராஜேஸ்வரி. கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பற்றி கூரைவீடு முழுவதும் எரிந்து விட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்களால் தீ அணைக்கப்பட்டது. அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் 3 பேரும் மீட்கப்பட்டனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் தகவல் தெரிவித்ததன்பேரில் தாசில்தார் ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை ரூ.5 ஆயிரம், வேட்டி மற்றும் சேலை வழங்கினார். உடன் ஆவனம் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் இருந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சத்யா. இவரது மனைவி ராஜேஸ்வரி. கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு ராஜேஸ்வரி வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பற்றி கூரைவீடு முழுவதும் எரிந்து விட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்களால் தீ அணைக்கப்பட்டது. அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் 3 பேரும் மீட்கப்பட்டனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் தகவல் தெரிவித்ததன்பேரில் தாசில்தார் ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை ரூ.5 ஆயிரம், வேட்டி மற்றும் சேலை வழங்கினார். உடன் ஆவனம் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X