என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
புதுவையில் மதுப்பாட்டில்கள் விற்றதாக ஒரே நாளில் 56 பேர் மீது வழக்கு பதிவு
புதுவையில் மதுப்பாட்டில்கள் விற்றதாக ஒரே நாளில் 56 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி மதுபானம் விற்பனைகளை கைது செய்தாலும் தொடர்ந்து மது விற்பனை நடந்து வருகிறது.
இதையடுத்து நேற்று புதுவையில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த 56 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், தங்களை அதில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பயணம் செய்யக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் இதனை மீறி செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.
இதற்கிடையே போலீசாரின் எச்சரிக்கையை மீறி வில்லியனூர் பகுதியில் முக கவசம் அணியாமலும், மோட்டார் சைக்கிளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த 100 பேர் மீது வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்துள்ளார்.
புதுவையில் மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி மதுபானம் விற்பனைகளை கைது செய்தாலும் தொடர்ந்து மது விற்பனை நடந்து வருகிறது.
இதையடுத்து நேற்று புதுவையில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த 56 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், தங்களை அதில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பயணம் செய்யக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் இதனை மீறி செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளனர்.
இதற்கிடையே போலீசாரின் எச்சரிக்கையை மீறி வில்லியனூர் பகுதியில் முக கவசம் அணியாமலும், மோட்டார் சைக்கிளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த 100 பேர் மீது வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Next Story






