search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வதந்தி பரப்பிய 5 பேர் மீது வழக்கு

    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக வளைதளத்தில் வதந்திகளை பரப்பிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக வளைதளத்தில் வதந்திகளை பரப்பிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எஸ்.பி. அலுவலக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளத்தில் வரும் உண்மைக்கு மாறான செய்திகளை பார்த்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவ்துறை இணைந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம்.

    எனவே பொது மக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×