search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒடுக்கத்தூர் அருகே பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய்

    ஒடுக்கத்தூர் அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    அணைக்கட்டு:

    ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கல்லபாறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (28) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜெயலட்சுமி கல்லபாறையில் தனியாக வசித்து வந்தார். அப்போது ஜெயலட்சுமிக்கும் ஹரிஷ் (26) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஜெயலட்சுமி கர்ப்பமானார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார்.

    நேற்று பெண் குழந்தையை கோணிப்பையில் கட்டி அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஜெயலட்சுமி வீசினார். தண்ணீரில் மூழ்கி சாக்கு மூட்டையில் இருந்த குழந்தை இறந்தது.

    இன்று காலை சாக்குமூட்டையில் குழந்தை பிணம் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் கோணிப்பை மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த குழந்தையின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயலட்சுமி குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலட்சுமி போலீசாரிடம் கூறுகையில்:-

    கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை வளர்ப்பதற்கு அசிங்கப்பட்டு கிணற்றில் வீசி கொலை செய்தேன் என தெரிவித்தார். கைதான ஜெயலட்சுமியை ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×