search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது

    வேதாரண்யம் தாலுக்கா வாய்மேட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த டிரைவரை கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் தனிப்படை போலிசார் வாய்மேடு திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் வாகன சோதனை மற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் வாய்மேடு பகுதியிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த டாராஸ் லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் சவுடு மணல் இருந்ததும் அதை எடுத்துச் செல்வதற்கு எந்த அனுமதியும் இல்லை என தெரிவந்தது. அந்த லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து லாரியை ஒட்டிவந்த டிரைவர் ஓரடியம்புலத்தைச் சேர்ந்த இளம்பரிதி (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×