என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தபால் நிலையம் மூலம் 5 நாடுகளுக்கு முக கவசம் ஏற்றுமதி
Byமாலை மலர்19 March 2020 10:23 AM GMT (Updated: 19 March 2020 10:23 AM GMT)
தபால் நிலையங்களில் இருந்து சீனா, பாகிஸ்தான் தவிர 5 நாடுகளுக்கு முக கவசம் (மாஸ்க்) அனுப்பப்படுகிறது என தபால் துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு தலைமை தபால் நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் சஞ்சீவி கூறியதாவது:-
தனியார் கொரியர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்ப தற்போது கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தபால் மூலம் முறையான அனுமதி பெற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பருத்தி நூல் இலைகளில் உற்பத்தி செய்யப்படும் முக கவசங்களுக்கு பல்வேறு நாடுகளில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்ற ஈரோடு மாஸ்க் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து மாஸ்க் பார்சல்களை அனுப்பி வைக்கின்றனர்.
சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை தவிர அமெரிக்கா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக முக கவசம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 1500 கிலோ எடை கொண்ட முக கவசம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு தலைமை தபால் நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் சஞ்சீவி கூறியதாவது:-
தனியார் கொரியர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்ப தற்போது கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தபால் மூலம் முறையான அனுமதி பெற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பருத்தி நூல் இலைகளில் உற்பத்தி செய்யப்படும் முக கவசங்களுக்கு பல்வேறு நாடுகளில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்ற ஈரோடு மாஸ்க் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து மாஸ்க் பார்சல்களை அனுப்பி வைக்கின்றனர்.
சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை தவிர அமெரிக்கா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக முக கவசம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 1500 கிலோ எடை கொண்ட முக கவசம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X