என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
Byமாலை மலர்4 March 2020 4:30 PM GMT (Updated: 4 March 2020 4:30 PM GMT)
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.
சேலம்:
சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை. கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் கொரோ பரவி வருவதால் இன்னும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இருமல், காய்ச்சல் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் 2 சதவீதம் மட்டுமே இறப்புக்கு வாய்ப்பு. போதுமான அளவுக்கு முகக் கவசங்கள், உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X