என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே 10-ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்27 Feb 2020 10:29 AM GMT (Updated: 27 Feb 2020 10:29 AM GMT)
குடியாத்தம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
வேலூர்:
குடியாத்தம் பகுதியில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் (1098) எண்ணிற்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. அதன்பேரில் வேலூர் மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், சமூக நலத்துறை ஊழியர்கள் பிரியங்கா, ரம்யா, சைல்டுலைன் அணி உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் குடியாத்தம் போலீசார் ஆகியோர் இரவு 10 மணியளவில் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று அதிகாலை வாலிபரின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 18 வயது நிரம்பிய பின்னரே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள், சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
குடியாத்தம் பகுதியில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் (1098) எண்ணிற்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. அதன்பேரில் வேலூர் மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், சமூக நலத்துறை ஊழியர்கள் பிரியங்கா, ரம்யா, சைல்டுலைன் அணி உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் குடியாத்தம் போலீசார் ஆகியோர் இரவு 10 மணியளவில் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று அதிகாலை வாலிபரின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 18 வயது நிரம்பிய பின்னரே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள், சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X