search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிட மாற்றம்
    X
    பணியிட மாற்றம்

    ஈரோட்டில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

    ஈரோடு மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் ஈரோடு வழங்கல் அலுவலரின் இருந்த பரிமளா ஈரோடு தாசில்தாராகவும், ஈரோடு தாசில்தாராக இருந்த ரவிச்சந்திரன் மொடக்குறிச்சி தாசில்தாராகவும், பெருந்துறை தாசில்தாராக இருந்த துரைசாமி முத்திரைத்தாள் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.

    ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக இருந்த மாசிலாமணி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளரகவும், மொடக்குறிச்சி தாசில்தாராக இருந்த கவுசல்யா ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்கவும், பெருந்துறை தாசில்தாராக முத்துகிருஷ்ணன், ஈரோடு ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளராக செந்தில்ராஜாவும் மாற்றப்பட்டனர்.

    கோபி தாசில்தாராக சிவசங்கர், பவானி நத்தம் செட்டில்மென்ட் தாசில்தாராக விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று ஈரோடு தாசில்தாராக பரிமளா பொறுப்பேற்றுக்கொண்டார்.



    Next Story
    ×