என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கே.வி.குப்பம் அருகே கிணற்றில் பெண் பிணம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மனைவி வசந்தா (வயது 55). கூலி தொழிலாளர்கள். கணவன், மனைவி இருவரும் கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவர் நிலத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் நிலத்திற்கு வேலைக்கு சென்ற வசந்தாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாலையில் அதே நிலத்தில் உள்ள கிணற்றில் வசந்தா மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் உடனடியாக கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வசந்தாவின் உடலை மீட்டனர். கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தா கிணற்றில் தவறி விழுந்தாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்