search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kuppam"

    ஆந்திர மாநிலம் குப்பத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #APSuicide
    திருப்பதி:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் மோனிஷா (வயது 21). இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஹேமந்த்குமார் (23). இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்கள் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மோனிஷாவின் பெற்றோர் மோனிஷாவை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஹேமந்த்குமாரும், மோனிஷாவும் வீட்டை விட்டு வெளியேறி இன்று காலை ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.

    பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். குப்பம் ரெயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்தனர்.

    இதனால் இருவரது உடல்களும் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலை மீட்டனர்.

    காதல் ஜோடி தற்கொலை செய்த இடத்தில் அவர்களது பைகள் கிடந்தன. அதில் அவர்கள் எழுதி இருந்த கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கூறியுள்ளனர்.

    தற்கொலை செய்த காதல் ஜோடியின் சடலத்தை மீட்ட ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  #APSuicide
    ×