search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோடு மாவட்டத்தில் 6 கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசார் - 105 பவுன் நகைகள் மீட்பு

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு போன நகைகளை மீட்ட தனிப்படை போலீசார் 6 கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடந்த திருட்டு குற்ற வழக்குகளின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜு மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சகாதேவன், பாலசுப்பிரமணியம் லோகநாதன், அறிவழகன் ஆகியோர் திருட்டுக் குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அதன் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இந்நிலையில் ஈரோடு சோலார் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர்.

    அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஸ் என்கிற வெங்கடேஸ்வரன்(வயது 30), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் (32) என்பதும் இவர்கள் கோபி போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இவர்களிடம் இருந்து 51 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. அவர்களின் இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் மாமரத்து பாளையம் பகுதியில் தங்கியிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூரை சேர்ந்த முத்துராஜ்(31), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் (28), ராமநாதபுரத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து 52 பவுன் நகைகள் மீட்கப்பட்டன இதைப்போல் சித்தோடு ஆப்பக்கூடல் ஆகிய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய சென்னிமலை பகுதியை சேர்ந்த பாலாஜி (22) கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

    மொத்தம் குற்றவாளிகளிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன இவற்றின் மதிப்பு ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இப்படிப்பட்ட குற்றவாளிகள் மீது ராமநாதபுரம் தர்மபுரி கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் வேலூர் கோவை போன்ற பகுதிகளிலும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மீட்கப்பட்ட நகைகள் காட்டப்பட்டது குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசாரை எஸ்பி சத்தி? கணேசன் பாராட்டி அவர்களுக்கு ரொக்கப் பணம் கொடுத்தார்.

    இதுகுறித்து எஸ்.பி. சத்தி கணேசன் கூறும்போது, “நடந்து முடிந்த குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி கேமரா முக்கிய ஆதாரமாக இருந்தது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும்” என்றார்.
    Next Story
    ×