என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் சலவன்பேட்டை கட்டிட ஒப்பந்ததாரர் கொலையில் தொழிலாளி கைது
வேலூர்:
வேலூர் சலவன்பேட்டை திருப்பூர்குமரன் 2 வது தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற முருகவேல் (வயது45). கட்டிட ஒப்பந்ததாரர் மேஸ்திரியாகவும் பணியாற்றி வந்தார்.
கடந்த 7-ந்தேதி இரவு ஆனைகுளத்தம்மன் கோவிலுக்கு முருகவேல் சாமி கும்பிட சென்றார். பின்னர் ஒத்தவாடை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் அங்கு வந்து முருகவேலை கத்தியால் குத்தினார். ரத்த காயத்துடன் தப்பி ஓடிய முருகவேல் நரசிங்க சாமி மடம் தெருவில் தரையில் விழுந்து இறந்தார்.
வேலூர் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முருகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஜயகுமாரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
முருகவேல் வீட்டில் விஜயகுமார் அவரது மனைவி இருவரும் வேலை பார்த்தனர்.
அப்போது விஜயகுமாரை வேலையிலிருந்து முருகவேல் நீக்கியுள்ளார். அவரது மனைவிக்கு மட்டும் வேலை கொடுத்துள்ளார் .
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் முருகவேலை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்