search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மயிலாடுதுறையில் குடிபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை

    மயிலாடுதுறையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை சாந்துகாப்பு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சபரிராஜ் (வயது 38 ). திருமணமாகாதவர்.

    அவரது அண்ணன் அசோக் நடத்திவரும் சிமெண்டு சிலாப் அமைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது உறவினர் மணி மகன் சதீஷ்(39). இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். சதீஷ் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    நேற்று மாலை சதீஷும் சபரிராஜூம் ஒன்றாக மது அருந்த சிமெண்டு சிலாப் செய்யும் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சதீஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சபரிராஜ் தலையிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சபரிராஜ் இறந்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×