என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரத்தில் கோவில் அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்13 Feb 2020 8:07 AM GMT (Updated: 13 Feb 2020 8:07 AM GMT)
மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி மாரியம்மன் கோவில் அருகே மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி மாரியம்மன் கோவில் பின்புறம் பச்சிளம் ஆண் குழந்தை நீண்ட நேரம் அழுதபடி இருந்தது. குழந்தை அருகே யாரும் இல்லை.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிலுக்கு வந்தவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
குழந்தை வீசப்பட்ட இடம் அருகே ஒரு பை மட்டும் கிடந்தது. அதில், ‘ஜனவரி 31-ந்தேதி திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை’ என்ற ஓ.பி. சீட்டு மட்டும் இருந்தது.
குழந்தை யாருடையது என்று தெரியாததால் போலீசார் செங்கல்பட்டு குழந்தைகள் நல அலுவலர் கீதாஞ்சலியிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
குழந்தையின் பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி மாரியம்மன் கோவில் பின்புறம் பச்சிளம் ஆண் குழந்தை நீண்ட நேரம் அழுதபடி இருந்தது. குழந்தை அருகே யாரும் இல்லை.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிலுக்கு வந்தவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
குழந்தை வீசப்பட்ட இடம் அருகே ஒரு பை மட்டும் கிடந்தது. அதில், ‘ஜனவரி 31-ந்தேதி திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை’ என்ற ஓ.பி. சீட்டு மட்டும் இருந்தது.
குழந்தை யாருடையது என்று தெரியாததால் போலீசார் செங்கல்பட்டு குழந்தைகள் நல அலுவலர் கீதாஞ்சலியிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
குழந்தையின் பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X