search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police rescue"

    லதா ரஜினிகாந்தின் தகவலால் உத்திரமேரூர் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி ஹரினியை போலீசார் மும்பையில் மீட்டனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள். நரிக்குறவர்கள். இவர்களது மகள் 2-வது மகள் ஹரினி கடந்த செப்டம்பர் 15-ந் தேதி கடப்பாக்கத்தில் நடந்த கோவில் தெருவில் வெங்கடேசன் குடும்பத்துடன் அங்கு கடை வைத்திருந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பவுஞ்சூர் கடை வீதியில் தூங்கினார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமி ஹரினியை காணவில்லை. மர்ம நபர்கள் அவளை கடத்தி சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

    இதற்கிடையே கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, குழந்தையை பறிகொடுத்த நரிக்குறவர் தம்பதியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போலீசாரிடம் கூறும்போது, கடத்தப்பட்ட சிறுமியை போல் ஒருவரை மும்பையில் உள்ள ரெயில் நிலையத்தில் கண்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவுப்படி தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் மும்பை சென்று விசாரித்தனர்.

    இந்த நிலையில் உத்திரமேரூர் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி ஹரினி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் அவளை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆனந்த கண்ணீரோடு சிறுமி ஹரினியை கட்டி அணைத்தனர். சிறுமி கடத்தலில் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    ×