search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சிபுரத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

    காஞ்சிபுரத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி அமராவதி பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (36). ரவுடி. இவர் மீது காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை சம்பவம் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் மற்றும் பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் போலீசார் கருணாகரனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கருணாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட கலெக்டர் பொன்னையாவிற்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, ரவுடி கருணாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த ஆணையை பாலுசெட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வேலூர் மத்திய சிறையில் வழங்கினார்.

    Next Story
    ×