என் மலர்
செய்திகள்

மாணவி ஒருவருக்கு மடிக்கணினியை கலெக்டர் சாந்தா வழங்கிய காட்சி.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள்- கலெக்டர் சாந்தா வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் 113 மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
இதில் கல்லூரி முதல்வர் முகேஷ்குமார், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், தாசில்தார் பாரதிவளவன், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story