search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை கூட்டம்
    X
    யானை கூட்டம்

    தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

    தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம்செய்வது தொடர் கதையாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் இரவு நேரங்களில் காவல் காக்கும் விவசாயிகளை தாக்குவதும் தொடர்கதையாகிவருகிறது .

    இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகனாரை அருகேஉள்ள ஜோர காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார். அவரது விவசாய நிலத்தில் வாழை மற்றும் தென்னை பயிர் செய்துள்ளார் .

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 15 யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது சத்தம் கேட்டுவந்த விவசாயி யானைகள் வாழை பயிர்களை நாசம் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அருகில் இருந்த விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். பட்டாசு வெடித்தும் தீ பந்தம் காட்டியும் யானைகளை விரட்ட தொடங்கினர். கூட்டமாக யானைகள் வந்ததால் வனப்பகுதியில் செல்லாமல் தொடர்ந்து வாழை பயிர்களை நாசம் செய்தது.

    சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் வனப்பகுதியில் சென்றது. யானைகள் மிதித்து நாசம் செய்ததில் 1 ஏக்கர் வாழை சேதாரம் ஆனாது.

    தாளவாடி மலைப் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம்செய்வது தொடர் கதையாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    வனவிலங்குகளால் சேதாரம் ஆகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடும் வனத்துறையால் வழங்கப்படுவது இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். யானைகள் விவசாய தோட்டத்தில் புகாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×