என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகை அருகே என்ஜினீயர் வீட்டில் நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கிய கும்பல்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம். என்ஜினீயரான இவர் அந்தப் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது திடீரென நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, வெளியே நிறுத்தி வைத்திருந்த கார், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
இதையறிந்த அப்துல் சலாம் வெளியே வராமல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்ததை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர் மர்மநபர்கள் விட்டுச் சென்ற அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ஹரி, வெங்கடேசன் ஆகிய இருவரை வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்